Sunday, May 19, 2024
Home » குவாக்கரேலி சைமண்ட்ஸ் உயர்கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது

குவாக்கரேலி சைமண்ட்ஸ் உயர்கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது

by kannappan

லண்டன் : பிரிட்டனின் குவாக்கரேலி சைமண்ட்ஸ் நிறுவனம் நடத்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவை இடம் பெற்று இருக்கின்றன. பிரிட்டனை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் குவாக்கரேலி சைமண்ட்ஸ் நிறுவனம் ஆசிய நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான இந்த தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் இந்தியாவை சேர்ந்த 19 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்று இருக்கின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் 185-வது இடத்தையும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 250-வது இடத்தை பிடித்திருக்கின்றன. சென்னை பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்ப பல்கலைக்கழகம் போன்றவை முதல் 400 இடங்களுக்குள் வரும் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்திருக்கின்றன.     …

You may also like

Leave a Comment

6 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi