சென்னை: குற்ற வழக்குகளில் புலன் விசாரணை நடக்கும்போது, பொதுமக்கள் யாரும் சாட்சி அளிக்க முன்வருவதில்லை என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. திரைப்படத்துறையில் துணை நடிகையாக இருந்த 16 வயது மைனர் பெண்ணை 2006ம் ஆண்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனி, ஜெயக்குமார், மணிபாரதி, கோபிநாத் கைதானவர்களின் வழக்கை கடந்த 2013ம் ஆண்டு விசாரித்த, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெபராஜ் என்பவர் காவல்துறை தரப்பால் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்ட சாட்சி. அவரது சாட்சியத்தை கருத்தில் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார்.இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, குற்ற வழக்குகள் புலன் விசாரணையில் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை என்பதை மறந்து விட முடியாது. காவல்துறையில் இருப்பு சாட்சி (ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் நபர்) என்பதற்காக கைது மற்றும் பறிமுதல் தொடர்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் சாட்சியத்தை ஒதுக்கி விட முடியாது. இந்த வழக்கில் தலை மறைவு குற்றவாளியான சரவணன்தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். மனுதாரர்கள் தங்கள் இச்சைக்காக சரவணனுக்கு இரையாகி விட்டனர். எனவே, நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்….
குற்ற வழக்கு விசாரணையின்போது சாட்சி அளிக்க மக்கள் முன்வருவதில்லை: ஐகோர்ட் கருத்து
previous post