கும்பகோணம், செப். 23: 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான கும்பகோணம் குறுவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஏ.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 134 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 62 மாணவர்கள் வெற்றிபெற்று பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் பெற்றுள்ளனர். இதில் மிக சிறப்பாக விளையாடிய மாணவர்கள் தஞ்சை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவர்களை ஏ.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் வைத்தியநாதன் மற்றும் பள்ளியின் தாளாளர் சுகமாலா வைத்தியநாதன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கி ஊக்குவித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் ரேவதிமோகன் மற்றும் பள்ளியின் முதல்வர் பாஸ்கர் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி ஊக்கம் அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.