கும்பகோணம், மார்ச்17:தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கணபதி அக்ரஹாரம், பூஞ்சேரி, மேலத்தெருவில் வசிப்பவர் கார்த்திக். அய்யம்பேட்டையில் பூக்கடை நடத்தி வரும் இவரது மனைவி பிரீத்தா (27). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவன் கார்த்திக் நேற்று பூக்கடைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மனைவி பிரீத்தா துணிகளை வீட்டின் கொல்லைப்புறம் உள்ள பம்பு மேடையில் துணி துவைத்து கொண்டிருந்தபோது இரண்டு மர்ம நபர்கள் கொல்லைப்புறம் புகுந்து ஒருவர் பிரீத்தா கையை பிடித்து வாயை மூடிக் கொண்டும், மற்றொருவர் கத்தியை காட்டி கத்தினால் குத்தி கொலை செய்து விடுவேன் எனக் கூறி அவர் அணிந்திருந்த 3.5 பவுன் எடை கொண்ட தங்கத் தாலிச்சங்கிலியை பறித்துவிட்டு பின்புறம் உள்ள வாழைக்கொல்லை வழியாக தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.