கும்பகோணம், மே 9: கும்பகோணம் மகாமககுளம் மேல்கரையில் தஞ்சை வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் 30ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கழக துணை பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மற்றும் கும்பகோணம் மாநகர செயலாளர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மகாமககுளம் மேல்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழைஎளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் ராஜசேகர், துணை செயலாளர்கள் சரவணன், காமராஜ், ஹேமாவதி, கிரி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு, செந்தில், உபயதுல்லா, மாநில தொழிற்சங்கம் பாலு மற்றும் மாநகர அவைத்தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் மதிமுக 30ம் ஆண்டு தொடக்க விழா
previous post