கும்பகோணம், ஜூலை 13: கும்பகோணம் மாநகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மாவட்ட திமுக பிரதிநிதி இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைவரையும் மாநகர செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன் வரவேற்றார். மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலாளர் பிரியம் சசிதரன், பொருளாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் சிவானந்தம் மற்றும் செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், சண்முகம், இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு, மாவட்ட அவைத்தலைவர் நசீர் முகமது, கும்பகோணம் ஒன்றிய குழு துணைத்தலைவர் உள்ளூர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், அண்ணாதுரை, நாசர், கூகூர் அம்பிகாபதி, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் ஆடுதுறை உத்திராபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிவக்குமார்,
மாவட்ட கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் திமுக செயலாளர்கள், பகுதி திமுக செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாநகர வட்ட கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், மாநகர சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக, கட்சியின் மூத்த முன்னோடி முன்னாள் வட்ட கழக செயலாளர் நடேசன் நன்றி கூறினார்.