குன்னூர் : தொடர் மழை காரணமாக குன்னூர் – கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தற்போது காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால், குன்னூர் – கோத்தகிரி பிரதான சாலையில் பந்துமை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர், சாலை சீரமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், குன்னூர் கோத்தகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், பாலவாசி பெட்ரோல் பங்க் அருகில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஊழியர்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தி சீரமைத்தனர்….
குன்னூர் – கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
previous post