Saturday, May 11, 2024
Home » குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி

குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி

by Arun Kumar

 

கிருஷ்ணகிரி, மார்ச் 19: அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், பதக்கங்களை வென்று சாதனை படைத்த கிருஷ்ணகிரி மாணவர்களை கலெக்டர் பாராட்டினார். தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற்றது. இதில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் வயது பிரிவினர் கலந்து கொண்டனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் பிரித்திவிராஜ் என்ற மாணவன் தங்க பதக்கமும், வசந்த் என்ற மாணவன் வெண்கல பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கும், பயிற்றுனர் முனிராசுவுக்கும், மாவட்ட கலெக்டர் சரயு, வருவாய் கோட்டாட்சியர் பாபு மற்றும் மாவட்ட விளையாட்டு -இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

18 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi