மரக்காணம், ஏப். 18: மரக்காணம் இபி சாலையில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோட்டக்குப்பம் டிஎஸ்பி உத்தரவின்பேரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது இபி சாலையில் உள்ள ரவிச்சந்திரன் (58) என்பவரது வீட்டிலிருந்து ஏழு மூட்டைகளில் 80 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ரவிச்சந்திரன், அவரது மகன் அரவிந்தகுமார் (31) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென விழுப்புரம் மாவட்ட எஸ்பி மாவட்ட ஆட்சியர் பழனிக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் பழனியின் உத்தரவுபேரில் ரவிச்சந்திரன், அவரது மகன் அரவிந்தகுமாரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
குட்கா விற்ற தந்தை, மகன் குண்டர் சட்டத்தில் கைது
previous post