Wednesday, May 29, 2024
Home » குடிபோதையில் கணவன் தகராறு மனைவி, மகன்கள் தற்கொலை முயற்சி

குடிபோதையில் கணவன் தகராறு மனைவி, மகன்கள் தற்கொலை முயற்சி

by kannappan

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் அருகே மலைப்பட்டு கிராமம், ரேணுகாம்பாள் தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (45), கூலி தொழிலாளி. இவருக்கு சசிகலா (38), என்ற மனைவியும், ஜெயகாந்தன் (16), ஜெகதீஷ் (14) என்ற மகன்கள் உள்ளனர். ஜெயகாந்தன் 12ம் வகுப்பும், ஜெகதீஷ் 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தற்போது சிவராஜ் குடிபழக்கத்திற்கு அடிமையாகி, சம்பாதிக்கும் பணத்தை குடித்து செலவழித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் சிவராஜ் குடித்துவிட்டு வந்து சசிகலாவிடம் பிரச்சனை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிகலா தனது மகன்களான ஜெயகாந்தன், ஜெகதீஷ் ஆகிய இருவருக்கும் பூச்சி மருந்து கொடுத்து தானும் குடித்துள்ளார். இதனைகண்ட சிவராஜ், 3 பேரையும்  ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகன்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi