Tuesday, May 14, 2024
Home » குஜிலியம்பாறை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

குஜிலியம்பாறை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

by Karthik Yash

குஜிலியம்பாறை, பிப். 23: குஜிலியம்பாறை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் – கரூர் ரயில்வே வழித்தடத்தில் பாளையம் ரயில் நிலையத்திற்கும் வெள்ளியணை ரயில் நிலையத்திற்கும் இடையே டி.கூடலூர் ஜக்கலப்பநாயக்கனூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்த அவரது முகம் சிதைந்திருந்தது. அவரது இடது நெஞ்சில் கோகிலா என்ற பெயர் பச்ைச குத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே எஸ்.ஐ கேசவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பலியான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரயிலில் அடிபட்டி இறந்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

sixteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi