மேக்கே தாட்டு அணையை கட்ட அனுமதித்து புதுச்சேரி, தமிழகத்தை வஞ்சித்த காவிரி ஆணைய தலைவரை கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேற்று கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜா தியேட்டர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி தலைமையில் திரண்ட குழுவினர், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் காவிரி ஆணைய தலைவர் ஹல்தரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹல்தரின் கொடும்பாவியை எரித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் பெரியகடை போலீசார் உடனே அவர்களை அப்புறப்படுத்தினர்.