போச்சம்பள்ளி, ஜன.23: கள்ளகுறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஜெகதீஸ்வரன் (23). இவர் பெங்களுரில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்திருந்த ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம், பைக்கில் பெங்களூரு நோக்கி புறப்பட்டார். மத்தூர் அருகே தொகரப்பள்ளி காப்புகாடு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கார் ஜெகதீஸ்வரன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெகதீஸ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி இன்ஜினியர் பலி
previous post