திருப்பரங்குன்றம், ஏப். 14: மதுரை எச்எம்எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (27). இவர் தனது காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். தினந்தோறும் இரவில் சவாரி முடித்துவிட்டு தனது காரை அச்சம்பத்து பத்மா நகரில் உள்ள நண்பர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை கார் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, காரை திருடிய மதுரை, பெத்தானியாபுரம் பாத்திமா நகரைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ராஜபாண்டி (37) என்பவரை கைது செய்தனர்.