சங்கரன்கோவில், பிப். 16: சங்கரன்கோவில் அருகேயுள்ள தெற்கு பனவடலிசத்திரம் விலக்கு அருகே நேற்று முன்தினம் இரு கார்கள் நேருக்குக் நேர் மோதிக் கொண்டன. அந்த கார்கள் பைக், ஆட்டோ மீது மோதியது. இதில் 9 பேர் காயமடைந்தனர். இதில் பைக்கில் வந்த தேவர்குளம் அருகேயுள்ள வன்னிக்கோனேந்தலைச் சேர்ந்த ரத்தினம் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு ருக்மணி என்ற மனைவியும், பாலமுருகன், சிவசுப்பிரமணியன் ஆகிய 2 மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
கார்கள் நேருக்கு நேர் மோதலில் ஒருவர் சாவு
previous post