காரைக்குடி, ஜன. 25: காரைக்குடி நகராட்சியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் முத்துத்துரை தலைமை வகித்தார். ஆணையர் வீரமுத்துக்குமார், துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் சுருளிநாதன், துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன், தேர்தல் உதவியாளர் ஆனந்த விசுவாசகம், நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.