Sunday, May 19, 2024
Home » காரேகவுண்டன்பாளையம் பகுதியில் மதுபோதையில் தூங்கிய இலங்கை அகதி சாவு

காரேகவுண்டன்பாளையம் பகுதியில் மதுபோதையில் தூங்கிய இலங்கை அகதி சாவு

by Ranjith

 

அன்னூர், மே 20: மதுரை மாவட்டம் திருமங்கலம் கூத்தியார் குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தர்மசீலன்(40). இவர் தற்போது கோவை மாவட்டம் அன்னுரை அடுத்துள்ள காரேகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தர்மசீலன் தான் வேலை செய்து வந்த சைட்டில் இருந்து டீ குடிக்க சென்று விட்டு, அதன் பின்னர் குடிபோதையில் வந்தவர் புதிதாக கட்டப்பட்டு வரும் குடோன் முன்பு படுத்து உறங்கியுள்ளார். வழக்கம்போல தர்மசீலன் மது அருந்திவிட்டு தான் வருவார் என நினைத்த உடன் பணிபுரிந்தவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.

பின்னர் சற்று நேரம் கழித்து அவரை உடன் பணிபுரியும் விவேக், கண்ணன் உள்ளிட்டோர் எழுப்பி உள்ளனர். ஆனால், எழுந்திருக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

12 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi