தூத்துக்குடி, ஜூன்19: தூத்துக்குடியில் காரில் வந்து ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மீளவிட்டான் வி.எம்.எஸ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். (40) இவருக்கு சொந்தமான ஆடு அப்பகுதியில் உள்ள மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்தது, அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி அந்த ஆட்டை காரில் போட்டு திருடி சென்றனர். இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (29), குறிஞ்சிநகரை சேர்ந்த சரவணன்(31), அழகேசபுரத்தை சேர்ந்த ராமர்(51) ஆகிய மூன்று பேரும் காரில் வந்து ஆடு திருடியது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர்கள் 3 பேரும் நண்பர்கள் என்பதும், மது அருந்த பணம் இல்லாததால், அவர்களது மற்றொரு நண்பரின் காரில் வந்து ஆட்டை திருடி சென்று விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடிக்க ஆசைப்பட்டு ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் ஆடுதிருட பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.