சூளகிரி, மார்ச் 29: வேப்பனஹள்ளி பறக்கும்படை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் போலீசார், சூளகிரி தாலுகா பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியை சேர்ந்த நாராயண ரெட்டி மகன் அணில் என்பதும், அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.87,290 எடுத்து வந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, சூளகிரி தாசில்தார் சக்திவேலுவிடம் ஒப்படைத்தனர்.