Wednesday, May 15, 2024
Home » காதலருடன் விரைவில் திருமணம்: பூனம் பஜ்வா தகவல்

காதலருடன் விரைவில் திருமணம்: பூனம் பஜ்வா தகவல்

by kannappan

சென்னை: சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதன்பிறகு தெனாவெட்டு, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட் உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்தார். தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடிக்கும் படம் ‘குருமூர்த்தி’. இந்த படத்தில் அவர் நட்டி நட்ராஜ் ஜோடியாக நடித்திருக்கிறார். சிவசலபதி, சாய் சரவணன் தயாரிக்கும் இந்த படத்தை கே.பி.தனசேகர் இயக்கி உள்ளார்.படத்தில் நடித்திருப்பது பற்றி பூனம் பஜ்வா கூறியதாவது: 3 வருடங்களுக்கு பிறகு தமிழ் ரசிகர்களை சந்திக்க வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால்தான் இந்த இடைவெளி ஏற்பட்டது. மேலும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்கிறேன். தற்போது மலையாளத்தில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்ற படத்தில் திருவனந்தபுரம் ராணியாக நடித்து வருகிறேன். குருமூர்த்தி படத்தில் நட்டி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். நான் அவரது மனைவியாக நடித்திருக்கிறேன். மனைவி என்றாலும் கதையில் என்னுடைய கேரக்டருக்கு அழுத்தமான சில விஷயங்கள் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாக சொல்கிறார்கள். எல்லா நேரமும் ரசிகர்களோடு தியேட்டரில் மட்டும் தொடர்பில் இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில்தான் அது சாத்தியமாகிறது. அப்படி இருந்தாலும் நான் அணியும் உடைகளில்தான் கவர்ச்சி இருக்குமே தவிர உடலை காட்டுவதில் இருக்காது. ஹீரோயினாகத்தான் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். இப்போதெல்லாம் கதைதான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். அந்த கதையில் முக்கியமான கேரக்டர் எதுவானாலும் நடிக்கலாம். வெப் தொடர்களில் இதுவரை நடித்ததில்லை. நல்ல வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.தெலுங்கு இயக்குனர் சுனில் ரெட்டியை காதலித்து வருகிறேன். இதனை சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிவித்து விட்டேன். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம். திருமண தேதி உள்ளிட்ட விவரங்களை விரைவில் அறிவிப்பேன். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். …

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi