காஞ்சிபுரம்: கடந்த 4 நாட்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் ஏரிகள் கனமழை காரணமாக நிரம்பி வருகிறது. இப்பகுதியில் பாலாறு, செய்யாறு, வேகவதியாறு இந்த மூன்றும் ஆறும் ஒன்றாக சங்கமிக்கும் பகுதி தான் திருமுக்கூடல் ஆகும். பழையச்சிவரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தற்போது முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பகுதி கடல் நீர் போல் காட்சியளிக்கிறது. வினாடிக்கு 10,000 முதல் 15,000 கன அடிவரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் இங்கு வந்து துணி துவைத்தல், குளித்தல், செல்போன்களில் புகைப்படங்கள் எடுப்பது என பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பழையசீவரம் சுற்றியுள்ள பகுதிகள் சில கிராமங்களுக்கு குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 907 ஏரிகள் உள்ளன. அதில் 430 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது….