களக்காடு, ஜன. 20: களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம், நேரு வீதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (44). இவர், களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பைக்கை களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பைக்கை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
களக்காட்டில் பைக் திருட்டு
previous post