களக்காடு,நவ.29: களக்காடு அருகே சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் திருஏடு வாசிப்பு விழா தொடங்கி நடந்து வருகிறது. களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் பழமை வாய்ந்த மந் நாராயணசுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இந்த கோயிலில் அய்யா நாராயணசுவாமி நரசிம்ம அவதார மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் கார்த்திகை மாத திரு ஏடு வாசிப்பு விழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு தினசரி சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து திரு ஏடு வாசித்து விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற டிச.8ம் தேதி (வெள்ளி) திருக்கல்யாண வைபவமும், டிச 10ம் தேதி (சனி) பட்டாபிஷேக விழாவும் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அய்யா நாராயணசுவாமி வாகன பவனி இடம் பெறுகிறது. இரவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா குழுவினர் செய்து வருகின்றனர்.
களக்காடு அருகே சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் திருஏடு வாசிப்பு விழா தொடக்கம்
previous post