அம்பை, பிப். 6: கல்லிடைக் குறிச்சியில் கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய போலீசார் கல்லிடைக்குறிச்சி ஆற்றுப்பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் பத்தமடை முதலாவது தெருவைச் சேர்ந்த மாசானமுத்து (26) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட போலீசார் அவர் 100 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து மாசானமுத்துவை கைதுசெய்தனர்.