லால்குடி, மார்ச் 27: லால்குடி அருகே கல்லக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் ஒரு லட்சத்தினை பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக காரில் வந்த கல்லக்குடி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரிடம் சோதனை செய்தபோது வந்த ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தார் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணம் லால்குடி சார்நிலை கருவூலகத்தில் வைக்கப்பட்டது.