ஊட்டி, ஜூலை 17: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தொமுச போக்குவரத்து கழக கோத்தகிரி கிளை சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொமுச மண்டல பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கோத்தகிரி கிளை தலைவர் ரத்தினக்குமார் வரவேற்றார். மாவட்ட திமுக செயலாளர் முபாரக் பங்கேற்று தொமுச தொழிற்சங்க கொடியேற்றி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மாவட்ட அவை தலைவர் போஜன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், சத்தக்கத்துல்லா, கோத்தகிரி பேரூர் செயலாளர் காளிதாஸ், பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முருகன், மண்டல தலைவர் லூக்மான் ஹக்கீம், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பிரதிநிதிகள் ஜாபர், சுசில், நடுஹட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், அணிகளின் துணை அமைப்பாளர்கள் திருச்செல்வம், சண்முகராஜ், வின்சென்ட், சுரேஷ், கோத்தகிரி கிளை நிர்வாகிகள் மகாலிங்கம், சரவணன், குமார், எர்குலஸ், சிவப்பிரகாசம், முருகன், ஸ்டீபன், முத்துராஜா, ஆனந்தன், சந்திரன், கணேசன், மத்திய சங்க நிர்வாகிகள் நிரேஷ்குமார், யோகரத்தினம், குமார், ராமலிங்கம், மேகநாதன், ரவி, பாலசந்திரன், ராமலிங்கம், கோபாலகிருஷணன், முத்துக்குமார் உட்பட செயல் வீரர்கள் திரளாக கலந்துகொண்டனர்.