ராமநாதபுரம், மே 6: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழாவில் கலைஞர் நினைவாக பள்ளி மாணவர்களுக்கு 53 ஆயிரம் பேனாக்கள் வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர், ஜாக்டோ&ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது.
திமுக ஆட்சியில் கலைஞர் 53 ஆயிரம் ஆசிரியர்களை காலமுறை ஊதியம் பெரும் கையெழுத்திட்டு ஆசிரியர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கினார். எனவே கலைஞர் பேனாவிற்கு மெரினா கடலில் நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா வருகின்ற 21 ந்தேதி சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் கலந்து கொள்ளவிருக்கின்றனர். விழாவின்போது சிறந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இளஞ்சூரியன் விருதும், சிறந்த ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளுக்கும் விருது வழங்கப்பட உள்ளது. கலைஞர் நினைவாக மாணவர்களுக்கு 53 ஆயிரம் பேனா வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். உள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற உள்ள ஐம்பெரும் விழா ஏற்பாட்டிற்காக ராமநாதபுரம் மாவட்டம் சங்கம் சார்பிலாக நிதி உதவியை தனுஷ்கோடியில் வைத்து வழங்கினர்.