பெரம்பலூர், ஜூன் 16: பெரம்பலூர் மாவட்டத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நொறுக்கும் கருவி வழங்கப்படவுள்தால் தகுதியுடை யவர்கள் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெ றலாம் என்று மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2023-20 24-ம் ஆண்டிற்கு 50 சதவீத மானியத்தில் மின்சார த்தால் இயங்கும் புல் நொ றுக்கும் கருவி 50 பயனாளி களுக்கு வழங்கப்படவுள்ளது. 50 சதவிகித அரசு மானி யத்திலும்,50சதவிகிதம் பய னாளிகள் பங்குத்தொகை யாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் இ து வரை எந்த திட்டத்திலும் அரசு மானியத்தில் புல் நொறுக்கும் கருவி பெறாத வர்களாக இருக்க வேண் டும். மேலும் 0.25 ஏக்கர் நில த்தில் தீவன புல் பயிரிட்டு இருக்க வேண்டும்.
குறைந் தது 2 பசு அல்லது எருமை வளர்க்கும் விவசாயிகளுக் கு மின்சாரம் நொறுக்கும் கருவி வழங்கப்படவுள்ளது. பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும். எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கால் நடை வளர்ப்பவர்கள் தங் கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவ ரை அணுகி திட்ட விபரங்க ளைப் பெற்று உரிய படிவத் தில் தங்களுடைய புகைப் படம், குடும்ப அட்டையின் ந கல், அலைபேசி எண், ஆதா ர் எண், தங்கள் பெயரில் உ ள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப் பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வரு கிற 20ம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.