Sunday, June 16, 2024
Home » கலசபாக்கம் அருகே விஷம் வைத்தார்களா?ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்

கலசபாக்கம் அருகே விஷம் வைத்தார்களா?ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்

by kannappan

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே மர்மமான முறையில் ஏரியில் இறந்து கிடந்த 7 மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த காப்பலூர் பெரிய ஏரி அருகாமையில் அடர்ந்த முட்புதர்கள் உள்ளது. இப்பகுதியில் மான்கள், மயில்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. மர்ம ஆசாமிகள் அடிக்கடி வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகளோ கண்டுகொள்வதே இல்லை. உரிய நடவடிக்கை எடுக்காததால் வேட்டை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காப்பலூர் பெரிய ஏரியில் 3 ஆண் மயில்கள், 4 பெண் மயில்கள் உயிரிழந்து அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ேமலும், கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இறந்த மயில்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் மயில்கள் இறந்தது குறித்து தெரியவரும். வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க யாரேனும் விஷம் வைத்து மயில்களை கொன்றார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்ைத கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். மர்மமான முறையில் 7 மயில்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்ைதயும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது….

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi