மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. மதுராந்தகம் அடுத்த சின்ன கொளம்பாக்கத்தில் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 15 மற்றும் 16வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். முதல்வர் காசிநாதன் பாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 451 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி புல முதல்வர் சுப்பாராஜ், அண்ணா பல்கலை தேர்வுகளில் சிறப்பான இடம் பிடித்த மாணவ, மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார்….