Saturday, May 18, 2024
Home » கறம்பக்குடி வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு

கறம்பக்குடி வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு

by Neethimaan

கறம்பக்குடி,ஏப்.7: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டார விவசாயிகள் அனைவரும் வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன் பெற ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்து பயன் பெற்று கொள்ளலாம் என கறம்பக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் நெப்போலியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கறம்பக்குடி வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டம் தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன் பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட தங்கள் வட்ட கிராம நிர்வாக அலுவலகம் வட்டார வேளாண்மை மற்றும் தோட்ட கலை துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகளின் ஆதார் எண் விவசாயிகளின் புகைப்படம், அவர்களின் வங்கி கணக்கு எண், விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று Grains என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் போது நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயின் விவரம் அடிப்படையில் Grains என்ற இணைய தளத்தில் சேகரிக்கப்பட்டு வேளாண்மை உழவர் நல துறை, பேரிடர் மேலாண்மை துறை, தோட்ட கலை துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடைபராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு துறை, வருவாய் துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயணடைய பயன்படுத்தப்படுகிறது. மேலும் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும்.

வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்ய கறம்பக்குடி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகம் வட்டார வேளாண்மை துறை மற்றும் தோட்ட கலை துறை அலுவலகத்தை அணுகி Grains என்ற இணைய தளத்தின் மூலம் விவசாயிகள் தங்களது ஆதார் எண் புகைப்படம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண் நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையலாம். இதற்கான முகாம் அனைத்து கிராமங்களிலும் வரும் 10ம்தேதி வரை நடைபெற உள்ளது. எனவே கறம்பக்குடி வட்டார வேளாண் விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

eight + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi