கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக நேற்று காலை தமிழ் கூடல் விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.தலைமை ஆசிரியர் முனைவர் துரைகுமரன் தலைமை வகித்து பேசுகையில், தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலை மரபு ஆகியவற்றைப் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வதன் அவசியம் குறித்தும் அவற்றைப் போற்றி பாதுகாக்க வேண்டியது அவசியத்தையும் எடுத்து கூறினார். சிறப்பு அழைப்பாளராக கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் செல்வக்குமார் பங்கேற்று மாணவர்களுக்கு தமிழின் பெருமை பற்றியும் தொன்மை பற்றியும் இலக்கிய கதைகளை சுட்டிக்காட்டி சிறப்புரை ஆற்றினார்.