கரூர், மே 14: கரூர் ரயில்வே நிலைய சாலைப்பகுதியை ஆடு போன்ற கால்நடைகள் ஆக்ரமித்துள்ளதால் பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். கருர் மாநகராட்சிக்குட்பட்ட அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறும் ரத்தினம் சாலை போன்ற பல்வேறு சாலைப் பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் நடமாட்டம் அதிகளவு இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து எளிதாக நடைபெறாமல் உள்ளது.
இந்நிலையில், ரயிலவே நிலையம் செலலும் சாலையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் தவிர பாதசாரிகள் எளிதாக நடந்து செல்லும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியினரால் வளர்க்கப்படும் ஆடு போன்ற கால்நடைகள் அதிகளவு ஆக்ரமித்து, பாதசாரிகளும் எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு ஆடு போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்களிடம் இதனால் ஏற்படும் இடையூறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.