Saturday, June 1, 2024
Home » கரூர் மாவட்டவேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5ஆண்டு முடிவுற்ற பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை

கரூர் மாவட்டவேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5ஆண்டு முடிவுற்ற பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை

by Karthik Yash

கரூர், ஜூலை6: கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எந்தவித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.400, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.500, மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750ம், தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுககு ரூ. 750ம், பட்டதாரிகளுக்கு ரூ. 1000ம் வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வித்தகுதிகளை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஜூன் 30ம்தேதியுடன் ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களுக்கும், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் பதிவு செய்து ஒரு வரும் முடிவுற்ற பதிவுதாரர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இதர வகுப்பினர் 40 வ யதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருக்க கூடாது. அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருக்க கூடாது. மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.இந்த தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மட்டும் வழங்கப்படும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள் உடனடியாக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் துவக்கி வைத்தார்.

You may also like

Leave a Comment

eight + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi