கரூர், நவ. 17: கரூர் காமராஜ் மார்க்கெட் வளாகத்தை ஒட்டி கொட்டப்பட்டுள்ள காய்கறி கழிவுகளை இந்த பகுதியில் இருந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கருர் மாநகரின் மையப்பகுதியில் காமராஜ் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நு£ற்நுக்கணக்கான கடைகள் இந்த வளாகத்தில் செயல்படுகிறது. தினமும் ஏராளமானோர் வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக காமராஜ் மார்க்கெட் வளாகத்தை ஒட்டியுள்ள பகுதியில் அதிகளவு காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
தொடர் மழையின் காரணமாக தற்போது இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். எனவே, இந்த பகுதியோரம் கொட்டப்பட்டுள்ள காய்கறி கழிவுகளை உடனடியாக இந்த பகுதியில இருந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, பணியாளர்கள் முலம் இதனை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.