கழுதி, பிப்.6: கமுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால் கமுதி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான அபிராமம், முதுகுளத்தூர், பார்த்திபனூர், பேரையூர், செங்கப்படை, கீழராமநதி, மண்டலமாணிக்கம், பசும்பொன் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக கமுதி உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.