Sunday, May 19, 2024
Home » கனரக வாகனங்களால் சேதமடைவதை தவிர்க்க நெல்லையப்பர் கோயில் காட்சி மண்டபம் சாலை அடைப்பு: கார், இருசக்கர வாகனங்கள் செல்லலாம்

கனரக வாகனங்களால் சேதமடைவதை தவிர்க்க நெல்லையப்பர் கோயில் காட்சி மண்டபம் சாலை அடைப்பு: கார், இருசக்கர வாகனங்கள் செல்லலாம்

by kannappan

நெல்லை: நெல்லையப்பர் ேகாயில் காட்சி மண்டபம் கனரக வாகனங்களால் சேதமடைவதை தவிர்க்க மண்டம் வழியாக செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. ஆனால் கார், இருசக்கர வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஆனித்தேரோட்டம், ஐப்பசி திருக்கல்யாணம், ஆவணி மூலத்திருநாள் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்படும். இதில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் 9ம் திருவிழாவில் நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்மன் தபசு காட்சியும், சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும் நடைபெறும். இத்தகைய சிறப்பு மிக்க காட்சி மண்டபம் சாலையில் தூத்துக்குடியில் இருந்து மரத்தடிகள் ஏற்றிவரும் லாரிகள், கேரளாவுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் கன்டெய்னர் லாரிகள் பயணித்து வருகின்றன. கனரக லாரிகள் காட்சி மண்டப சாலையில் நுழைந்து திரும்பி செல்லும் போது பலமுறை மண்டபத்தில் மோதி மண்டபம் சிதிலம் அடைந்தது. இதனை சீரமைக்கவும், கனரக வாகனங்கள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கவும் பக்தர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காட்சி மண்டபம் அறநிலையத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்ேபாது இரவு நேரத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் லாரிகள், மரத்தடிகளை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் அதிகப்படியாக இயக்கப்படுகின்றன. இதனால் மீண்டும் காட்சி மண்டபம் சேதமடையும் நிலை உள்ளது. இதன் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் சார்பில் காட்சி மண்டபம் நுழைவு வாயில் பகுதியில் கனரக வாகனங்கள் செல்லாத வகையில் கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கார்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடுப்புகளை மீறி காட்சி மண்டப சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் மீது அறநிலையத்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது….

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi