திருவில்லிபுத்தூர்:.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் பொண்ணுபாண்டியன். பின்னர் அவர் 2016ம் ஆண்டு சென்னையில் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுக விருதுநகர் மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.திருவில்லிபுத்தூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 11 பேர் உள்ளனர்.தேர்தல் பணியாற்ற அனுபவம் வாய்ந்த எங்களை மாவட்ட தலைமை (அமைச்சர் ராஜேந்திரபாலாஜி) அழைக்கவில்லை. இது எங்களுக்கு ஏற்பட்ட அவமானம். இதனால் அதிமுகவில் இருந்து விடுவித்துக் கொள்ள முடிவு எடுத்தேன். என் நிலைப்பாட்டை அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளருக்கு தெரிவித்து விட்டேன். திருவில்லிபுத்தூரில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்வேன் என்றார். …