Tuesday, May 21, 2024
Home » கடையை கவனிக்க கூறியதால் தகராறு மனைவியை அடித்து கொல்ல முயற்சி: கணவன் கைது

கடையை கவனிக்க கூறியதால் தகராறு மனைவியை அடித்து கொல்ல முயற்சி: கணவன் கைது

by kannappan

ஆவடி: அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, ஜேபி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (34). இவர்களுக்கு தீபஸ்ரீ (14) என்ற மகளும், வசந்த் (10) என்ற மகனும் உள்ளனர். முத்து, தினமும் மதிய வேளையில் மனைவி விஜயலட்சுமியை கடையில் வியாபாரம் பார்க்க அனுப்பிவிடுவார். பின்னர், அவர் வீட்டில் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மாலை கடைக்கு வருவது வழக்கம். இதேபோல் கடந்த 14ந்தேதி விஜயலட்சுமி கடைக்கு அனுப்பிவிட்டு, முத்து வீட்டில் ஓய்வு எடுத்துள்ளார். பின்னர், இரவு மீண்டும் கடையை மூடிவிட்டு முத்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மனைவி விஜயலட்சுமி, தினமும் என்னை மதிய வேளையில் கடைக்கு அனுப்பி விட்டு, நீங்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய், என முத்துவிடம் கேட்டுள்ளார். இதில், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்து, விஜயலட்சுமியை கன்னத்தில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவர், மறுநாள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து போது, விஜயலட்சுமிக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். புகாரின்படி போலீசார் போலீசார் வழக்கு பதிவு முத்துவை கைதுசெய்து விசாரிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi