தர்மபுரி, பிப்.9: காரிமங்கலம் எஸ்ஐ நரசிம்மன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரிமங்கலம் டவுன் பகுதியில், 2 கடைகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைகளில் இருந்த சரவெடிகள் உள்பட ₹2 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர்கள் 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.
கடையில் பட்டாசு விற்ற 2 பேர் கைது
previous post