Friday, May 10, 2024
Home » கடம்பூர் அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி

கடம்பூர் அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி

by Karthik Yash
Published: Last Updated on

கயத்தாறு,பிப்.10: கடம்பூர் அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலியானார். கடம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கே.சிதம்பராபுரம் மேட்டு தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் ரவீந்திரன் (62). இவருக்கு சுஜலதா என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். நேற்று காலை ரவீந்திரன் ஊருக்கு அருகே உள்ள சிவன் கோவில் குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்திற்குள் தவறி விழுந்ததில் ரவீந்திரன் பரிதாபமாக இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்த கடம்பூர் காவல் நிலைய போலீசார், ரவீந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

15 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi