Friday, May 17, 2024
Home » கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

by Karthik Yash

திட்டக்குடி, ஏப். 29: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள புலிகரம்பலூர் கிராமத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்வது வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் புலிகரம்பலூர் அய்யனார் கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும், ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
அவரை போலீசார் துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை சோதனை செய்தபோது அவரிடம் தலா 10 கிராம் கொண்ட 10 பாக்கெட் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை 100 கிராம் ஆகும். மேலும் விசாரணையில் அந்த நபர் ராமநத்தம் அடுத்துள்ள புலிகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் ராஜ்குமார் (33) என தெரியவந்தது. இதனையடுத்து ராமாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

You may also like

Leave a Comment

4 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi