குடியாத்தம்: குடியாத்தம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தண்டபாணி மகன் விஷ்ணு (23) என்பவரை, போலீசார் கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.