கோவை, ஏப்.7: பாண்டிச்சேரி நெல்லித்தோப் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்(49). இவரது மகன் ஆதித்யா(16) கோவை சிறுவாணி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கணேஷிற்கும் அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேஷ் கோவையில் உள்ள தனது மகன் ஆதித்யாவை பார்க்க வந்துள்ளார். இதையடுத்து கணேஷை தனது மகனை அழைத்துகொண்டு கோவை பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
அப்போது தான் கொண்டு வந்திருந்த பஞ்சாமிருதத்தில் விஷம் கலந்து தன் மகனுக்கு கொடுத்து, தானும் தற்கொலை செய்துகொண்டார். தந்தை மகன் இறந்துகிடந்ததை அறிந்த ஒட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கணேஷ் மற்றும் ஆதித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.