புதுக்கோட்டை: மியவாக்கி காடுகள் திட்டத்தின் கீழ் கீரனூர் சார்பு நீதிமன்றத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார். இதில் சார்பு நீதிபதி ராஜேஷ், நீதித்துறை நடுவர், முருகானந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பழனிவேல்ராஐன், வக்கீல்கள் மகாலிங்கம், சிவகுமார், உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.