Sunday, June 16, 2024
Home » ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

by kannappan

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளதால் கோயில் நகரம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதையொட்டி ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், கைலாசநாதர், சிவகாமி சமேத நடராஜர், செட்டி தெருவில் உள்ள புண்ணியகோட்டீஸ்வரர், காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், தவளேஸ்வரர், ருத்ரகோட்டீஸ்வரர், மணிகண்டேஸ்வரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர், நகரீஸ்வரர், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், காந்தளீஸ்வரர், மாமல்லபுரம் மல்லீஸ்வரர்  என காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 127 சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது.. இதில் நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு நடராஜரை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள், விழா குழுவினர், நிர்வாகிகள் செய்தனர்….

You may also like

Leave a Comment

16 − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi