Saturday, June 1, 2024
Home » ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து கால்நடை பெரியம்மை தடுக்க தீவிர நடவடிக்கை: பிரதமர் மோடி பேச்சு

ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து கால்நடை பெரியம்மை தடுக்க தீவிர நடவடிக்கை: பிரதமர் மோடி பேச்சு

by kannappan

நொய்டா: கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சமீப காலமாக தோல் நோய்கள் தீவிரமாக பரவி வருகிறது. வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்நோய் ரத்தம் குடிக்கும் பூச்சிகளால் பரப்பப்படுகிறது. இதன் காரணமாக பல கால்நடைகள் பலியாகி வருகின்றன. தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச பால் பண்ணை உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவதுஉலக அளவில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. கால்நடை பெரியம்மை நோயினால் சமீபத்தில் ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இந்நோய்க்கு எதிராக விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே தடுப்பூசி கண்டுபிடித்துள்ளனர். இதற்காக கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய்க்கு 100 சதவீத தடுப்பூசி போடப்பட உள்ளது. கால்நடைகளை பயோமெட்ரிக் முறையில் அடையாளம் காண்பதற்காக பசு ஆதார் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.*கடற்கரை சுத்தம் மிகவும் அவசியம்மும்பையில் உள்ள ஜூஹு கடற்கரையில் குப்பைகளை அகற்றிய தன்னார்வலர்கள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘கடற்கரையை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தியா, நீண்ட அழகான கடற்கரைகளை கொண்டுள்ளது. நம் கடற்கரைகளை தூய்மையாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம்’’ என டிவிட் செய்துள்ளார்….

You may also like

Leave a Comment

20 − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi