மும்பை: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்களை டெல்லி அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிரநயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பாண்ட் 51 ரன்கள், லலித் யாதவ் 20, டாம் குர்ரான் 21 ரன்கள் எடுத்தனர். 148 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது….