Sunday, May 19, 2024
Home » ஏலச்சீட்டு நடத்தி மோசடி கணவன்-மனைவி மாயம்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி கணவன்-மனைவி மாயம்

by Ranjith

 

பண்ருட்டி, ஆக. 27: பண்ருட்டி அருகே அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (48). இவரது மனைவி லட்சுமி (46). இருவரும், அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். ஆனால் பல நபர்களுக்கு ஏல பணத்தை திருப்பித்தரவில்லை. இந்நிலையில் நெய்வேலியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ரூ.2 லட்சம் சீட்டு கட்டி ஏலம் எடுத்தார். இதையடுத்து அவர், அவர்களிடம் உரிய பணத்தை கேட்ட போது தரமுடியாது என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார், நாராயணன், அவரது மனைவி லட்சுமி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். மேலும் இதுபோல் பாதிப்படைந்தவர்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யலாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

nineteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi