ஏற்காடு, ஏப்.28: கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை முன்னிட்டு ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஏற்காட்டில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ணத்தை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். கோடை விடுமுறையையொட்டி, நேற்று வழக்கத்தை விட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரிபூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோயில், பொட்டானிக்கல் கார்டன், லேடிஸ்சீட் போன்ற இடங்களில் குடும்பத்துடன் பொழுதை போக்கினர். மேலும் இங்குள்ள படகு இல்லத்தில், குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
previous post